செய்திகள் :

Agaram: "21 வயதில் நானும் ஆசைப்பட்டேன்; அதேபோல சூர்யாவும்..." - கமல்ஹாசன்

post image

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், "அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

Agaram விதை 15-ம் ஆண்டு விழா
Agaram விதை 15-ம் ஆண்டு விழா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், "கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர், மேடையில் பேசிய கமல்ஹாசன், "கல்வியும் அன்பும் ஒருங்கே கிடைப்பதில்லை. அது, அம்மாவிடம் கிடைக்கும். அகரத்திடம் கிடைக்கும்.

சினிமா வானில் நட்சத்திரமாக இருப்பதற்கு கொடுக்கப்படும் கிரீடம் வேறு.

ஆனால் இந்த சமூக வானில் இந்த மாதிரி நற்பணிகள் செய்வதற்கு முள்கிரீடம் தான் கிடைக்கும்.

பரவாயில்லை எனக்கு அந்த கிரீடம் போதும் என்று சொல்வதற்கு மனோபலம் வேண்டும். ஏனென்றால் கூட யாரும் நிற்க மாட்டார்கள்.

கமல்ஹாசன் - சூர்யா
கமல்ஹாசன் - சூர்யா

சினிமாக்காரர்கள் என்பதைத் தாண்டி சமூகத்தில் பெரியவர்கள் பட்டியலில் சேர்வதற்கு நானும் 21 வயதில் ஆசைப்பட்டேன்.

இவரும் (சூர்யா) இளமையிலேயே ஆசைப்பட்டு விட்டார்.

நாங்கள் செய்வது பல மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு அற்புதமான கலைத்துறை. ஆனால், அது வியாபாரத்துறையும் கூட.

லாபத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். எனக்கு அதுதான் சோறு போடுகிறது. அதுதான் எனக்கு நற்பணி இயக்கத்தையும் நடத்துகிறது.

அன்பும் கல்வியும் போதுமானது. அந்த ஆயுதத்தை வைத்து உலகத்தை வெல்லலாம்." என்று கூறினார்.

``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர் படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. குஜராத் மாநில காவல்துறை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சோலா, சந... மேலும் பார்க்க

Agaram: "உலகத்துல சவாலானது நல்லது செய்றது; யாருக்காக வேண்டும் என்பதில் சூர்யா... " - சு.வெங்கடேசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க

Agaram விதை 15-ம் ஆண்டு: "சூர்யா செய்வது மிகப்பெரிய மனிதாபிமான சேவை" - வீரமுத்துவேல் புகழாரம்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப... மேலும் பார்க்க

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - சாட்சி வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்புகள் நடத்தியதாக மகாராஷ்டிரா தீவிர... மேலும் பார்க்க

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

பொதுவாக மரணத்தைப் பற்றி யாரும் அமர்ந்து பேச மாட்டார்கள். மரணம் என்ற வார்த்தையே ஒரு வித உணர்ச்சி தொடர்பான விஷயமாக தோன்றும். ஆனால் மரணத்தை பற்றி பேசுவதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால... மேலும் பார்க்க

Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?

உலகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன... மேலும் பார்க்க