செய்திகள் :

முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி நபர்கள் கைது

post image

பள்ளி தலைமையாசிரியராக ஒரு முஸ்லிம் நபர் இருந்ததால் அந்த பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷத்தைல் கலந்த வலதுசாரி அமைப்பு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் அரசுப் பள்ளியில் முதல்வர் பொறுப்பிலிருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவொரு ஆசிரியரை பணியிலிருந்து நீக்குவதற்காக அந்தப் பள்ளியின் குடிநீர்த்தொட்டியில் சிலர் விஷத்தைக் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி மாவட்டத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இந்த அசம்பாவிதம் நடைபெற்றது.

இந்த வழக்கில் உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படும் ‘ஸ்ரீ ராம் சேனை’ அமைப்பின் தலைவர் ஒருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூலிக்கட்டி பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தலைமையாசிரியராக இருப்பவர் சுலேமான் கோரிநாய்க். இந்தநிலையில், அவர் மீது களங்கம் ஏற்படுத்தி அவருக்கு அவப்பெயர் பெற்றுக்கொடுத்து அவரை பணியிலிருந்து விரட்ட மேற்கண்ட கைது செய்யப்பட்ட நபர்கள் முயற்சித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

விஷம் கலந்த குடிநீரை பருகிய மாணவர்களில் 12 பேர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பின்னரே, பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவனும் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மாணவனிடம் விஷம் அடைக்கப்பட்ட ஒரு குப்பியைக் கொடுத்து அந்த நபர்கள் குடிநீர்த் தொட்டியில் கலக்க மிரட்டியதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத வெறுப்பால் இந்த கொடுஞ்செயல் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!

நீட் முதுநிலை தேர்வு இன்று(ஆக. 3) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை தேர்வு வாரியம் விடப்பட்டுள்ளது. எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மருத்து... மேலும் பார்க்க

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

மும்பை: அரசை விமர்சிப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறதா? என்பதைக் குறித்து பாஜக ஆளுங்கட்சியாக உள்ள மகாராஷ்டிரத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின... மேலும் பார்க்க

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க