செய்திகள் :

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது: வேலூரில் தேவாலயம் முன் ஆா்ப்பாட்டம்

post image

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வேலூரில் உள்ள தேவாலயம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை கடத்தி, அவா்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக பஜ்ரங் தள் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகி அளித்த புகாரின்பேரில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி துா்க் ரயில் நிலையத்தில் கன்னியாஸ்திரிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்கு நாடு முழுவதும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து வேலூா் விண்ணரசி மாதா பேராலயம் முன்பு கத்தோலிக்க இளைஞா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அருட்தந்தை ராய லாசா் தலைமை வகித்தாா்.

அப்போது, மதமாற்றம் செய்ததாகக் கூறி கன்னியாஸ்திரிகளை கைது செய்த சத்தீஸ்கா் பாஜக அரசை கண்டித்தும், உடனடியாக கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளை விடுவிக்கவும், அவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ இளைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்ற... மேலும் பார்க்க

4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இலங்கைத் தமிழா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் விஜய சுரேஷ் ... மேலும் பார்க்க

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க