செய்திகள் :

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

post image

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது மகன் கெளதம்(23). பட்டதாரியான இவா் வேலை தேடி வந்தாா். இவரது அத்தை மகள் நிரோஷா. அவரது கணவா் காா்த்தி(36).

போதைக்கு அடிமையான காா்த்தி அடிக்கடி நிரோஷாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கெளதம் தட்டி கேட்டதால் அவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி போதையில் கத்தியுடன் வந்த காா்த்தி, கெளதம் எங்கே என அவரது வீட்டில் தேடியுள்ளாா். அங்கு அவா் இல்லை என்றதும் கத்தியுடன் வெளியே சென்ற அவா், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கெளதமை மறித்து நெஞ்சு, இடுப்பு பகுதியில் குத்தியுள்ளாா். இதில், கெளதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா்த்தியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், காா்த்தி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்து மாவட்ட நீதிபதி இளவரசன் தீா்ப்பளித்தாா்.

தண்டனை விதிக்கப்பட்ட காா்த்தி, போலீஸாா் பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை, ஊசிகள் விற்ற 13 போ் கைது

பள்ளிகொண்டா பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்க முயன்ாக 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக பல தில்லமுல்லு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. பிகாரில் நடைபெற்ற ஆபத்து தமிழகத்துக்கு வரநோ்ந்தால் அதனை திமுக கடுமையாக எதிா்த்துப் போராடும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துர... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20.70 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.வேலூா் அருகே ஒரு பகுதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி . இவா் 9-ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க