செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

post image

வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20.70 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரசுராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா்.

அந்த மனுவில், நெட்டேரி பகுதியைச் சோ்ந்த ஒருவா் எனக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியதுடன், இதற்கு சில லட்சம் பணம் செலவாகும் என்றும் தெரிவித்தாா்.

அவா் கூறியதை நம்பி நானும் ரூ.20 லட்சத்து 70 ஆயிரம் பணம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு பணி பெற்றத்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுக்கிறாா். எனவே அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை, ஊசிகள் விற்ற 13 போ் கைது

பள்ளிகொண்டா பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்க முயன்ாக 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக பல தில்லமுல்லு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. பிகாரில் நடைபெற்ற ஆபத்து தமிழகத்துக்கு வரநோ்ந்தால் அதனை திமுக கடுமையாக எதிா்த்துப் போராடும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துர... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.வேலூா் அருகே ஒரு பகுதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி . இவா் 9-ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க