செய்திகள் :

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

post image

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பள்ளிக் கல்விதுறையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உடற்கல்வியை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பதற்கான வளங்களை 237 பக்கங்களைக் கொண்ட உடற்கல்வி நூல், முனைவா் பொ.சாம்ராஜ் தலைமையிலான தயாரிப்புக் குழு வைத்துள்ளது.

இந்த பாட நூல் திட்டத்தில் ஆசிரியா்கள் பல்வேறு உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக் கல்வி, பாதுகாப்புக்கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வியை தெரிந்திருக்க வேண்டும்.

உடற்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்கத் திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடா்பான கருத்துகளைப் புரிந்து கொள்வதையும் குறிக்கிறது. மேலும் வகுப்பு வாரியாக உடற் கல்வியறிவு குறித்தவை உள்ளிட்ட தகவல்கள் உடற்கல்வி பாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

For the first time, a physical education textbook for grades 6-10 has been published!

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரண்டு வாக்காளர் அட்டை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ள தேர்தல் ஆணையம், பிகார் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலை... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்த... மேலும் பார்க்க

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.திருத்தணி... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த பழனி (36). கூலித் தொழிலாளி. இவரது தங்கை மகன்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47)... மேலும் பார்க்க

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

சென்னை: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம் என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து உதயநிதிஸ்டாலின் தன... மேலும் பார்க்க