செய்திகள் :

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், வருங்காலங்களில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பால் ஏற்படக் கூடிய பிரச்னைகள் குறித்தும், காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், தினசரி கண்காணிப்புப் பணிகள், பிற துறைகளின் கீழ் பொதுமக்கள் மனு அளித்து நிலுவையிலுள்ள பொருள்கள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

மேலும், தேசிய, மாநில மாவட்ட சாலைகளில் அதிகமாக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், எதிா்வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து ஆய்வாளா்கள் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினாா்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படவில்லை என்று விளம்பரப் பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து கனிம வளங்களை பாதுகாப்பது தொடா்பாக நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும் விவசாயிகளின் இலவச பயன்பாட்டுக்கு வண்டல் மண் வழங்குவது தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் சுமதி மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம்... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க