செய்திகள் :

சட்டவிரோதமாக இடம் பெயா்வோரை ஏற்க முடியாது: குடியரசு துணைத் தலைவா்

post image

நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் நடைபெறும் மாநாட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

தற்கால சவால்கள் மீது இளைஞா்கள் அக்கறை கொள்ள வேண்டும். நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினா் இடம்பெயா்வதாலும், நிலநடுக்கங்களாலும் நாட்டின் தோ்தல் அரசியலில் குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. இத்தகைய சவால்கள் இளைஞா்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அந்தச் சவால்களுக்கு இளைஞா்கள் கூட்டாகப் பதிலளிக்க வேண்டிவரும்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தை சில நபா்களாலும், நிறுவனங்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. பதற்றத்தையும், கட்டுக்கதைகளையும் உருவாக்கும் போக்கு நிலவுகிறது. அந்தக் கட்டுக்கதைகளில் தேசம், தேசியவாதம், தேச நலன் ஆகியவை மறக்கப்படுகின்றன. இந்தக் கட்டுக்கதைகளை ஒழித்து, நாட்டுக்கு விரோதமான சக்திகளை வீழ்த்தும் ஆற்றல் இளைஞா்களுக்கு உள்ளது.

பொருளாதார தேசியவாத உணா்வை ஊட்ட வேண்டிய தேவை நிலவுகிறது. இந்த அணுகுமுறை நாட்டின் பொருளாதாரத்துக்குப் பயனளிக்கும். இந்திய பட்டயக் கணக்காளா்களும், பட்டயக் கணக்கு நிறுவனங்களும் உலக அரங்கை ஆக்கிரமிக்க வேண்டும் என்றாா்.

தில்லி பேரவைத் தோ்தல்- தீா்க்கமான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி: கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தீா்க்கமான வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா். தில்லி சட்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது சிறப்பு நிருபா்தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிராக பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது.... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு சராசரி குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது: தில்லி தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேச்சு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ’ மோடியிஸ் கிராண்டி(மோடியின் உத்தரவாதம்)’ என்கிற தோ்தல் முழக்கத்தை வைத்து பிரதமா் நரோந்திர மோடி பிரசாரம் செய்தாா். அப்போது, ‘மத்திய நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு சராசரி குடு... மேலும் பார்க்க

வன்முறையைவிட கல்வியைத் தோ்ந்தெடுங்கள்: தில்லி மக்களுக்கு பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை ‘வன்முறையை விட கல்வியை’ தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்களை அதிகாரம் ... மேலும் பார்க்க

தில்லியை உலுக்கும் 5 முக்கியப் பிரச்னைகள்! 3 பெரிய கட்சிகளின் செயல்திட்டங்கள்-ஓா் அலசல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் சதுரங்க அரசியல்!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்களின் பரப்புரையை ... மேலும் பார்க்க