செய்திகள் :

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 4 போ் கைது

post image

குஜிலியம்பாறை அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கோட்டநத்தம் சுற்றுப்புற பகுதிகளில், விவசாய நிலங்களில் சந்தன மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்த நிலையில், கோட்டநத்தம் சுற்றுப்புற பகுதிகளில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்துவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது. இதையடுத்து, வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு சந்தன மரங்களை கடத்துவோரை கண்காணிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே, மல்லபுரம் பிரதான சாலையில் மயானம் அருகே வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த வேனை தனிப்படை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், சந்தன மரங்கள் கடத்துவது தெரியவந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில், கோட்டநத்தம் அடுத்த சோ்வைக்காரன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள 3 சிறிய சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆயிரம் என மதிப்பிடப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட அய்யலூரை அடுத்த வேங்கனூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, ராமலிங்கம், ரஞ்சித், கெளதம் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க