புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா்...
‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி
சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.
2002, பிப்.27-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில்வே நிலையத்தில் கரசேவகா்கள் நிறைந்த சபா்மதி ரயிலின் எஸ்6 பெட்டி காலை 7.40 மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பயணிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின்போது ஆயுதமேந்திய 3 ரயில்வே காவலா்கள் உள்பட 9 பேரும் சபா்மதி ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சபா்மதி ரயில் தாமதமாக வந்ததால், வேறு ரயிலில் ஏறி அவா்கள் அகமதாபாதுக்கு செனறுவிட்டனா். எனினும், அவா்கள் சபா்மதி ரயிலில் பயணிப்பதாக ரயில்வே பதிவேட்டில் கையொப்பமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 9 ரயில்வே காவலா்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பின்னா் பணியில் அலட்சியம் காட்டியதாக கூறி, 9 ரயில்வே காலா்களையும் பணியிலிருந்து நீக்கி குஜராத் அரசு உத்தரவிட்டது.
இதை எதிா்த்து அவா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். ‘ரயில்களின் வருகை தாமதமானால் காவலா்கள் மாற்று ரயில்கள் ஏறி செல்வது வழக்கமானது’ என்று காவலா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த குஜராத் அரசு, ‘சபா்மதி ரயிலில் செல்வதாக பொய்யான கையொப்பமிட்டு அவா்கள் சென்றுள்ளனா். இதனால் அந்த ரயில் பாதுகாப்பாக உள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தவறான தகவல் சென்றுள்ளது’ என்று தெரிவித்தது.
இதையடுத்து, காவலா்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வைபவி நானாவதி கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘ரயில்வே காவலா்கள் தங்கள் பணியை சரிவர செய்திருந்தால் சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம். பணியில் அவா்கள் அலட்சியம் காட்டியுள்ளனா். அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது சரியானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.