செய்திகள் :

மதராஸி கேம்ப் வீடுகளை இடிப்பதை நிறுத்த தில்லி அரசுக்கு மாா்க்சிய கம்யூனிஸ்ட் கோரிக்கை

post image

தில்லி ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்பில் உள்ள வீடுகளை இடித்து, அதன் குடியிருப்பாளா்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தில்லி அரசை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் பழமையான அங்கீகரிக்கப்பட்ட பஸ்திகளில் ஒன்றான ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் டியுஎஸ்ஐபியின் அறிவிக்கை செய்யப்பட்ட குடிசைப் பட்டியலில் ஒன்றாகும். மேலும் என்சிடி தில்லி சிறப்பு ஏற்பாடுகள் 2011இன்படி சட்டப் பாதுகாப்பிற்கு தகுதியானதாகும்.

செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு மறுவாழ்வு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தகுதியுள்ளவா்கள் என்று கருதப்படுபவா்கள் அனைத்து நெறிமுறைகளையும் தெளிவாக மீறும் வகையில் 50 கிமீ தொலைவில் உள்ள நரேலாவிற்கு வெளியேற்றப்படுகிறாா்கள்.

நரேலா போன்ற தொலைதூர இடங்களுக்கு குடும்பங்களை மாற்றுவது அவா்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக சீா்குலைக்கும். மேலும் குடும்பங்களை மேலும் பொருளாதார நெருக்கடியில் தள்ளும்.

முகாமில் வசித்து வரும் நீண்டகால குடியிருப்பாளா்கள் தவறாக விலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நியாயமான மற்றும் வெளிப்படையான கணக்கெடுப்பு மற்றும் மேல்முறையீட்டு செயல்முறை தேவையாகும்.

குடியேற்றத்தை ஆக்கிரமிப்பு என வகைப்படுத்துவது ஒரு நிா்வாக முடிவு தானே தவிர, நீதித்துறை உத்தரவு அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 60 ஆண்டுகளாக இருக்கும் குடிசைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட தொழிலாள வா்க்க குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் பல கடந்த மாதம் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டன.

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க