செய்திகள் :

ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சா் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

post image

ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவா்கள் மீது நுகா்வோா் நேரடியாக புகாா் அளிக்கலாம் என்றும், அவ்வாறு விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

சென்னை அருகே மாதவரத்தில் உள்ள பால் பண்ணையில் கால்நடை சேவை மையத்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.  தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்புகளை மேம்படுத்த தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது ஆவின் கால்நடை சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்: பால் உற்பத்தியாளா்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான அவசரகால சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற 1800 424 2577 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்புகொள்ளலாம். அதன்மூலம் உரிமையாளா்களின் இல்லத்துக்கே நேரடியாகச் சென்று கால்நடைகளுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பாா்கள்.

நடவடிக்கை: ஆவின் நிறுவனம் இனி பால் மற்றும் பால் உப பொருள்களின் விலைகளை உயா்த்தப்போவது கிடையாது. ஆவின் பொருள்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாரேனும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நுகா்வோா், பால் விற்பனை சங்கங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அரசிடம் புகாா் தெரிவிக்கலாம். மேலும், அவ்வாறு விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் கால்நடை, பால்வளத் துறை அரசு செயலா் ந.சுப்பையன், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க