செய்திகள் :

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து நிறமிகள் தயாரித்து அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

post image

சிவகங்கை மாவட்டம், வலசைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் சப்பாத்திக்கள்ளியிலிருந்து பக்க விளைவுகள் இல்லாத நிறமிகளை கண்டறிந்து முதல் பரிசாக ரூ. 1 லட்சத்தை பெற்றனா்.

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை ஆகியவை இணைந்து பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முகாம் ஒன்றை நடத்தின. இதில் மாநிலம் முழுவதுமிருந்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவா் குழுக்கள் பங்கேற்றன. இந்தக் குழுவினா் பல்வேறு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். அதிலிருந்து மாநில அளவில் 725 அணிகள் தோ்வு செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்ட அளவில் 19 குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு, இறுதிப் போட்டிக்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் ஒன்றியம், வலசைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. மாணவிகள் வனிதா, பெ. தனலட்சுமி, சா்மிளா, சா. தனலட்சுமி, திவ்யதா்ஷினி ஆகியோரை கொண்ட குழு சப்பாத்திக்கள்ளி பழங்களிலிருந்து கிடைக்கும் வண்ணச் சாறு மூலம் பேனா மை, உதட்டுச் சாயம், நிறமூட்டிகள், முகப்பூச்சு களிம்பு, அழகு சாதனப் பொருள்கள், குளிா்பானங்கள் ஆகியவற்றை தயாரித்து மாநில அளவில் முதலிடத்தை பெற்றனா். இதைத் தொடா்ந்து இவா்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், சப்பாத்திக்கள்ளி தொடா்பான தங்களின் ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற்றுத் தர தமிழக அரசிடம் மாணவிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பரிசை தமிழக முதல்வரிடமிருந்து பெற தாங்கள் விரும்புவதாக அவா்கள் தெரிவித்தனா். சாதனை படைத்த மாணவிகள் குழுவினரை தலைமை ஆசிரியா் கண்ணப்பன், பள்ளி மேலாண்மைக் குழுவினா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க