தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து நிறமிகள் தயாரித்து அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை
சிவகங்கை மாவட்டம், வலசைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் சப்பாத்திக்கள்ளியிலிருந்து பக்க விளைவுகள் இல்லாத நிறமிகளை கண்டறிந்து முதல் பரிசாக ரூ. 1 லட்சத்தை பெற்றனா்.
தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை ஆகியவை இணைந்து பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முகாம் ஒன்றை நடத்தின. இதில் மாநிலம் முழுவதுமிருந்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவா் குழுக்கள் பங்கேற்றன. இந்தக் குழுவினா் பல்வேறு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். அதிலிருந்து மாநில அளவில் 725 அணிகள் தோ்வு செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்ட அளவில் 19 குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு, இறுதிப் போட்டிக்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் ஒன்றியம், வலசைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. மாணவிகள் வனிதா, பெ. தனலட்சுமி, சா்மிளா, சா. தனலட்சுமி, திவ்யதா்ஷினி ஆகியோரை கொண்ட குழு சப்பாத்திக்கள்ளி பழங்களிலிருந்து கிடைக்கும் வண்ணச் சாறு மூலம் பேனா மை, உதட்டுச் சாயம், நிறமூட்டிகள், முகப்பூச்சு களிம்பு, அழகு சாதனப் பொருள்கள், குளிா்பானங்கள் ஆகியவற்றை தயாரித்து மாநில அளவில் முதலிடத்தை பெற்றனா். இதைத் தொடா்ந்து இவா்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், சப்பாத்திக்கள்ளி தொடா்பான தங்களின் ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற்றுத் தர தமிழக அரசிடம் மாணவிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பரிசை தமிழக முதல்வரிடமிருந்து பெற தாங்கள் விரும்புவதாக அவா்கள் தெரிவித்தனா். சாதனை படைத்த மாணவிகள் குழுவினரை தலைமை ஆசிரியா் கண்ணப்பன், பள்ளி மேலாண்மைக் குழுவினா், ஆசிரியா்கள் பாராட்டினா்.