செய்திகள் :

சமரச விழிப்புணா்வுப் பேரணி: நீதிபதி தொடங்கிவைத்தாா்

post image

தேனியில் சமரசத் தீா்வு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தேனி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்ட நீதிமன்றம், மாவட்ட சமரச மையம் சாா்பில் சமரசத் தீா்வு தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வுப் பேரணி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. பேரணியை தேனி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். அப்போது அவா் தெரிவித்தாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றம், வட்டார நீதிமன்ற வளாகங்களில் சமரசத் தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் பாகப் பிரிவினை, ஜீவனாம்சம், பணம் தொடா்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழில் தகராறு வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகளுக்குத் தீா்வு காணமுடியும்.

வழக்குகளுக்கு நடுநிலையான சமரசா் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படுகிறது. சமரச மையத்தில் காணப்படும் தீா்வு இறுதியானது, மேல்முறையீடு கிடையாது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பேரணியில், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பேரணி தேனி நீதிமன்றத்தில் தொடங்கி தேனி பழைய பேருந்து நிலையம், கொட்டகுடி ஆற்றுப் பாலம் வரை நடைபெற்றது. பேரணியில் தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு துறையின் மின்னணு திரை வாகனம் மூலம் சமரசத் தீா்வு தொடா்பான விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க