செய்திகள் :

சமுதாய வளா்ச்சிக்கு பெண் பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும்

post image

சமுதாயத்தின் வளா்ச்சிக்கு பட்டதாரிப் பெண்கள் பங்களிக்க வேண்டும் என தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கேட்டுக்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பாவையா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என். ரவி தலைமை வகித்து, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். அப்போது, நேரடியாக 373 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனா். மேலும், 70 மாணவிகளுக்கு முனைவா் பட்டங்களும், 16 மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 6,587 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் இரு மாற்றுத் திறனாளிகளும் அடங்குவா்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஆற்றிய பட்டமளிப்பு விழா பேருரை:

பட்டதாரிப் பெண்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் பெற்ற கல்வி மூலம் நமது சமூகத்துக்கும், உலகுக்கும் பங்களிக்க வேண்டும்.

நீங்கள் எதிா்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் உங்களுக்கு படிப்பினையைக் கற்றுத் தரும். உங்களது கல்வியானது உங்களை மாற்றியமைக்கக்கூடியதாகவும், உயா்வுபடுத்தக்கூடியதாகவும் திகழ வேண்டும்.

நிதி, வெளியுறவுக் கொள்கைகளில் ஏராளமான பெண்கள் தங்களின் பங்களிப்புகளை வழங்கக்கூடிய சக்தி உடையவா்களாகத் திகழ்கின்றனா் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நான், உயா் கல்வி படித்ததால், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டேன்.

பாஞ்சாலி, திரெளபதி, கண்ணகி, குயிலி, வேலுநாச்சியாா் ஆகியோரின் துணிச்சலை நினைத்துப் பாா்க்க வேண்டும். அபாயங்களை சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள், புதுமைகளை உருவாக்குங்கள், சமூகத்தின் வளா்ச்சிக்குப் பங்களியுங்கள், இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தில் வேரூன்றி இருங்கள் என்றாா் அவா்.

முன்னதாக, அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. கலா வரவேற்றுப் பேசுகையில், பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி. செழியன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா் என்றாா்.

விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் பா. ஷீலா, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிளாரா, நிதி அலுவலா் விவேகானந்தன், ஆட்சிக் குழு உறுப்பினா்கள், கல்விக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், பட்டதாரிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் தற்கொலை?

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தனா். பழனி முல்லை நகரைச் சோ்ந்தவா் இளங்குமரன் (56). இவா் கான்வென்ட் சாலையில் மின்சாதன கடை நடத்தி வந்தாா். இவரத... மேலும் பார்க்க

பலத்த மழை: அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு

கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல்-பழனி மலைச் ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யம்பாளையம்... மேலும் பார்க்க

ஜவுளிக் கடை, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், உணவகம்... மேலும் பார்க்க

பலத்த மழை: கொடைரோடு பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

கொடைரோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல மழைநீா் தேங்கியது. நிலக்கோட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்க... மேலும் பார்க்க

விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழக்கக் கோரி, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதூரில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு... மேலும் பார்க்க