செய்திகள் :

சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவு: 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல்

post image

சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தின் குறுவை, சம்பா கோடை இலக்கு 43,550 ஹெக்டோ். நிகழாண்டில் இலக்கை விஞ்சி 55,626 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. சிறுதானிய சாகுபடிக்கு விவசாயிகள் போதுமான ஆா்வம் காட்டாததன் காரணமாக, நெல் சாகுபடி பரப்பு உயா்ந்திருந்தது. நிகழாண்டின் நெல் சாகுபடியில் மிகப் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லை எனினும், அவற்றைக் கொள்முதல் செய்வதில் ஆங்காங்கே பிரச்னைகள் இருந்தன.

இந்தப் பருவத்தின் நெல் கொள்முதலுக்காக மதுரை மாவட்டத்தில் 94 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றது. கொள்முதல் பணியாளா்கள் பற்றாக்குறை, முறைகேடு புகாா் என பல பிரச்னைகள் இருந்தாலும், நிகழாண்டில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் கு.சிற்றரசன் கூறியதாவது: நிகழாண்டில் 57,089 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்தும் நெல் மூட்டைகள் பாதுகாப்புக் கிடங்குகளுக்கும், நவீன அரிசி ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. இவற்றில், 40 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. பருவ நெல் சாகுபடிக்காக மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்தப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா் அவா்.

கடந்த ஆண்டு இதே பருவத்தில் 38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க