செய்திகள் :

சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய BSF அதிகாரி; சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதேசமயம், "இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உடனடியாக மறுப்பும் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை பாகிஸ்தான் மீது நேரடியாக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்காத மோடி அரசு,

"சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து.

வாஹா - அட்டாரி எல்லை உடனடியாக மூடல்.

பாகிஸ்தானியர்களுக்கு SVES விசாக்கள் உட்பட அனைத்து வகையான விசாக்களும் ரத்து.

இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக 72 மணிநேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவு" ஆகிய முடிவுகளை எடுத்திருக்கிறது.

இதற்கு எதிர்வினையாகப் பாகிஸ்தான் அரசு, "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து நீரை நிறுத்துவது போர் நடவடிக்கை. இதற்கு முழு பலத்துடன் நாங்கள் பதிலளிப்போம்.

மேலும், சிம்லா ஒப்பந்தம் உள்பட இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தும் உரிமையை நாங்கள் பயன்படுத்துவோம்" என்று எதிர்வினையாற்றியிருக்கிறது.

இந்த நிலையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை (BSF) அதிகாரி ஒருவர் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகப் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டிருக்கிறார்.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய BSF அதிகாரி
சிறைபிடிக்கப்பட்ட இந்திய BSF அதிகாரி

பி.கே.சிங் என்றறியப்படும் அந்த அதிகாரி, நேற்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் செக்டரில் சர்வதேச எல்லையைத் தவறுதலாகக் கடந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, பிடித்துவைக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரியைப் பாதுகாப்பாக மீட்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இந்திய ராணுவத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றி பாகிஸ்தான்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையை 'தண்ணீர் போர்' என்றும் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது பாகிஸ்தான். இந்தியாவின் நடவடிக்கைகளுக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``ராணுவத்துக்கு எதுவும் தெரியாமல் இருந்ததா?'' - உயிரிழந்தவரின் மனைவி கேள்வி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று குஜராத்தியர்களில் ஒருவரான ஷைலேஷ் ஹிம்மத்பாய் கல்தியா, அடக்க நிகழ்வில் குடும்பத்தினரின் துக்கம் கோபமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்பத்துடன் காஷ... மேலும் பார்க்க

``காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' - திருமாவளவன் விமர்சனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன், பிரதமர் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லாமல் தேர்தல் பரப்புரைக்கு சென்றதாக விமர்சித்துள்ளார். "அமித் ஷா பதவி விலக வேண்டும்... அரசியலுக்கா... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை முடக்கிய இந்திய அரசு; தொடரும் அதிரடிகள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வைரல் வீடியோ.. Jumping Jacks பயிற்சி செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: ஜம்ப்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) எனப்படுகிற உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ காட்சியை சமீபத்தில் செய்திகளில் பார்த்தேன். ஜம்ப்ப... மேலும் பார்க்க

Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி பராமரிக்கணும்?

மனிதனுக்குப் பல்வேறு நோய்கள் வர முக்கியக் காரணமே சுத்தமின்மைதான். எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் நாம், கவனக்குறைவாக இருப்பது கழிப்பறை சுத்தத்தில்தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா' என்று அசட்டையாக விட்ட... மேலும் பார்க்க