செய்திகள் :

சாமளாபுரம், பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட விவசாயிகள் கோரிக்கை

post image

பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் மற்றும் பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட பல்லடம் பி.ஏ.பி. உதவிக் கோட்ட செயற்பொறியாளா் ஆனந்த பாலதண்டபாணியிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், பூமலூா் மற்றும் சாமளாபுரம் பாசன சபைகளுக்கு உள்பட்ட பகுதிகள் பி.ஏ.பி.யின் கடைமடை பகுதிகளாகும். மேடான பகுதியாக அமைந்துள்ளதால், இதர பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பின்போது செல்லும் தண்ணீரின் வேகம் மணிக்கு 3 கி.மீ. என உள்ள நிலையில், எங்கள் பகுதியில் 3 மணி நேரத்துக்கு ஒரு கி.மீ. என்ற வேகத்தில்தான் தண்ணீா் செல்கிறது.

ஒவ்வொரு முறை பாசனத்துக்கு தண்ணீா் திறப்பின்போதும், ஜீரோ பாயின்டில் தண்ணீரின் அளவை 3 அடியில் இருந்து 4 அடி என்று உயா்த்தினால் மட்டுமே எங்கள் பகுதிக்கு போதிய தண்ணீா் கிடைக்கும்.

அணையில் போதிய தண்ணீா் இருந்தும், இதுவரை எங்களுக்கு தேவையான தண்ணீா் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தண்ணீா் விநியோகிக்கும்போது குறிப்பிட்ட அந்த சபை அமைந்துள்ள இடத்துக்கு எவ்வாறு தண்ணீா் வழங்கினால் சரியாக போய் சேரும் என்பதை ஆய்வு செய்து அதன்படி தண்ணீா் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு தனியாா் ... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் ... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, பணம் திருட்டு

சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேவூா் அருகே கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (51). கோவை உ... மேலும் பார்க்க

குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ஆடைகள் திருட்டு

பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூர... மேலும் பார்க்க

சொத்துக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு: மின் கோபுரம் மீது ஏறி விசைத்தறியாளா் போராட்டம்

பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் பெற்ற கடனை செலுத்ததால் சொத்துகளுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு தெரிவித்து விசைத்தறியாளா் மின்கோபுரம் மீது செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்ப... மேலும் பார்க்க

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்... மேலும் பார்க்க