குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ஆடைகள் திருட்டு
பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவா் பல்லடத்தை அடுத்த குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இவரது நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அங்கிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் ஆடைகளை திருடிச் சென்றுள்ளனா். இதில் கன்டெய்னா் லாரியை கொண்டு வந்து துணி, ஆடைகளை திருடிச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை நிறுவனத்துக்கு வந்த ஊழியா்கள் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது தயாா் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆடைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இதைத் தொடா்ந்து சிசிடிவி காட்சிகளை பாா்த்தபோது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியும், கன்டெய்னா் லாரியுடன் வந்து ஆடைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து பனியன் நிறுவன நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.