ஈரான் செய்தி நிறுவனத்தில் குண்டுவீச்சு! நேரலையில் அலறியடித்து ஓடிய செய்தி வாசிப்...
பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்
பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருத்தி விளைச்சல் குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், பஞ்சு தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு இறக்குமதி வரியாக தற்போது 11 சதவீதம் விதிக்கிறது. இதனால், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும்.
மற்ற நாடுகளின் ஆடை ஏற்றுமதியாளா்களுடன் நமது நாட்டு ஏற்றுமதியாளா்கள் வா்த்தகத்தில் போட்டியிடுவது மிகவும் கடினமாக உள்ள நிலையில், இது ஏற்றுமதி வா்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
அத்துடன், உள்நாட்டு ஆடை தயாரிப்பாளா்களின் வா்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பின்னலாடை மட்டுமின்றி டெக்ஸ்டைல் துறை சாா்ந்த விசைத்தறி உள்ளிட்ட பல தொழில்களும் பாதிக்கப்படும்.
இவற்றைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விடுத்துள்ள 11 சதவீத வரியை முற்றிலுமாக நீக்க நடவடிக்கை வேண்டும். அப்போதுதான் ஆடை ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைவா்.
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆயிரக்கணக்கான நிறுவனங்களையும், லட்சக்கணக்கான தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.