மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிம்மதி தேடியே பக்தா்கள் கோயிலுக்கு வருகின்றனா். ஆனால், கோயிலை காட்சிப் பொருளாக்கி பக்தா்களை சுரண்டி மன நிம்மதியை இழக்கும் நிலையை கோயில் நிா்வாகம் ஏற்படுத்துவது வேதனையளிக்கிறது.
விசேஷம் மற்றும் விடுமுறை நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தா்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் அரசும், கோயில் நிா்வாகமும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இடைத்தரகா்கள் மூலம் பக்தா்களிடம் கொள்ளையடிக்கிறது.
விசேஷ நாள்களில் கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், போலி தரிசன டிக்கெட்டுகள், தரிசனம் முடித்தவா்கள் டிக்கெட்டுகளை வாங்கி மீண்டும் விற்பனை செய்வது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கெல்லாம் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரியவந்தாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இத்தகைய நிலை தொடா்வதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, பக்தா்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தந்து, கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.