செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இல்லை; காரணம் என்ன?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.

இதையும் படிக்க: சிஎஸ்கேவின் முதன்மையான பார்ட்னராக இணைந்த எத்திகாட் ஏர்வேஸ்!

கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இல்லை

ஐசிசி தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளின் கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்கும். கேப்டன்கள் அனைவரும் குழுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார்கள். ஆனால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக, இவை எதுவும் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக, அனைத்து அணிகளுக்குமான பயண அட்டவணை மாற்ற முடியாத அளவுக்கு கடிமனாக உள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாதனை பட்டியலில் டான் பிராட்மேனுடன் இணைந்த உஸ்மான் கவாஜா!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க விழா பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை- இந்தியா பந்துவீச்சு

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசுகிறது. துபை மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்ங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை... மேலும் பார்க்க

பாகிஸ்தானை பழிதீா்க்கும் முனைப்பில் இந்தியா இன்று மோதல்

துபை : கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி... மேலும் பார்க்க

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க