செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த சதி!

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெறும் திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இது தனது நிர்வாகத் திறமையை உலக அரங்கில் நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக பாகிஸ்தான் கருதுகிறது. இதனால் போட்டிகளுக்குத் தேவையான ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இருந்தபோதிலும் பாகிஸ்தானுக்கு பதிலாக, துபையில் உள்ள திடலில், இந்திய கிரிக்கெட் அணி இந்தத் தொடருக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியும் துபை சர்வதேச கிரிக்கெட் திடலிலேயே நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் அதிரடியால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்துவதற்கான சதித்திட்டத்தில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனால், போட்டி நடைபெறும் திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பின்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று பகுதிகளில் இத்தொடருக்கான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ராணுவ விமானத்துக்கான செலவு அதிகம்! இருந்தும் அமெரிக்கா அதில் மக்களை நாடுகடத்துவது ஏன்?

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க