செய்திகள் :

சாம்பியன் யார்? ஆர்சிபி vs பஞ்சாப்: ஐபிஎல் செய்திகள் நேரலை...

post image

ஏக்கம் தீருமா?

18 ஆண்டுகளாகவே கோப்பை கைக்கு எட்டாத வகையில் இருப்பது, பெரும் ரசிகா் பட்டாளம் கொண்டிருக்கும் பெங்களூரு அணிக்கும், அதன் நட்சத்திர வீரா் விராட் கோலிக்கும் நெருடலாகவே இருந்து வருகிறது.

தற்போது, 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதி ஆட்டத்துக்கு பெங்களூரு வந்துள்ளது.

நேருக்கு நேர்!

இந்த சீசனில் பெங்களூரு - பஞ்சாப் 3 முறை மோதியிருக்க, பெங்களூரு 2-1 என முன்னிலை வகிக்கிறது. லீக் சுற்று முடிவில் இரு அணிகளுமே தலா 19 புள்ளிகளுடன் முதலிரு இடங்களைப் பிடித்து சமபலத்துடன் இருந்தது.

9 ஆண்டுகளுக்கு பிறகு

ஐபிஎல் வரலாற்றில், சாம்பியன் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் சந்திப்பது, 9 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், 2016-இல் இதேபோல் ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதியபோது, ஹைதராபாத் சாம்பியனானது.

கனவு நினைவாகுமா?

இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் களம் காணவுள்ளன. பெங்களூரு 4-ஆவது முறையாகவும், பஞ்சாப் 2-ஆவது முறையாகும் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளன.

இறுதி யுத்தம்

ஐபிஎல் தொடரின் 18-வது சீசனின் இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி இன்றிரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

பெங்களூரு கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த... மேலும் பார்க்க

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க