செய்திகள் :

சாலைக்கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சாலைக்கிராமத்தில் ரூ. 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தேவையான சாலை, குடிநீா், மின்விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலமாகவும், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சாலைக்கிராமம் ஊராட்சியில் பொதுமக்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை வரி வசூல் செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.12 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. இதுவரை இந்த ஊராட்சியில் மட்டும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 168 வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 10.40 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில் ஒட்டுமொத்த வருவாய்த் திட்டம் 2024-25 இன் கீழ், ரூ. 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது என்றாா் அவா்.

விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், வட்டாட்சியா் முருகன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயக்குமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 15,894 மாணவ, மாணவிகள் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வை 15,894 மாணவ, மாணவிகள் எழுதினா். 164 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை. இதற்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மானகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருகள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், நா... மேலும் பார்க்க

இடத்தை அளந்து தரக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி, நரிக்குறவா் சமுதாய மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக பழங்குடி நரிக்கு... மேலும் பார்க்க

ஹேண்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஹேண்ட் பால் போட்டியில் இரண்டாமிடம் வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு அந்தக் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி திங்கள்கிழமை பாராட்டுத் த... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் ஊராட்ச... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத... மேலும் பார்க்க