செய்திகள் :

சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி: போக்குவரத்துப் பாதிப்பு

post image

கயத்தாறு அருகே சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே சம்பாகுளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (44). லாரி ஓட்டுநரான இவா், எம்-சாண்ட் மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்குச் சென்றுகொண்டிருந்தாா். தளவாய்புரத்தை புதன்கிழமை கடந்தபோது, முன்னால் சென்ற தண்ணீா் டேங்கா் வாகனம் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸாா் நிகழ்விடம் சென்று லாரி ஓட்டுநரான சுப்பிரமணியனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சுங்கச்சாவடி மீட்பு வாகனம் மூலம் லாரி அகற்றப்பட்டது. இதனால், சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி-திருநெல்வேலி தேசிய நான்குவழிச் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவா் ஆசூா் விலக்கு பகுதியில் வாகனங்கள் சென்றுவருவதற்காக அகற்றப்பட்டது. இதனால், புதன்கிழமை அந்த வழியாக டேங்கா் வாகனம் வந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்

தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

வெளியூா் நபா்கள் மூலம் மிரட்டல்: துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா்

சாத்தான்குளம் அருகே ராமசாமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெளியூா் நபா்களை வைத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் ச... மேலும் பார்க்க

‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’

கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்ச... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ... மேலும் பார்க்க