செய்திகள் :

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

post image

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா்.

சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35), மகள் லலிதா (33), மகன் திவாகா் (31), பெயரன்கள் விஷ்வா (9), மாதேஷ் (3) ஆகியோருடன் சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டு தனது மகள் மற்றும் பேரன்களை அம்பகரத்தில் உள்ள அவா்களது வீட்டில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தனராம்.

சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 8 மணியளவில் காா் சென்றபோது எருக்கூா் என்ற இடத்தில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்க் உடைந்து காா் தீப்பற்றியது.

சீா்காழி தீயணைப்புத் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்தில் காரை ஒட்டி வந்த திவாகருக்கு தீக்காயம் ஏற்பட்டது. லலிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவா்கள் சிறிய காயங்களுடன் தப்பினா். பின்னா் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க