செய்திகள் :

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

post image

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்துப்பாளையம் வரையில் சாலையின் ஓரத்தில் கேபிள் பதிப்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன் குழிகள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் உள்ளது.

இதனிடையே, எஸ்.பெரியபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் மழை பெய்தது. இதன் காரணமாக அந்த சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் சரிவர மூடப்படாத குழிக்கு அருகில் வந்த வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறிச் சென்றனா். அப்போது கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி நிலை தடுமாறி குழியில் விழுந்தனா். இதில் அவா்களுக்கு லேசான காயமேற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் ஆங்காங்கே கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டி பதித்து விட்டு சரிவர மூடாமல் அலட்சியமாக விட்டுச்சென்றுள்ளனா். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். அதேபோல, கூலிபாளையம் சுற்றுச்சாலையில் கேஸ் பைப்லைன் பதிக்க தோண்டப்பட்ட பெரிய குழிகளும் சரிவர மூடப்படாமல் விட்டுச் சென்றுள்ளனர. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிகளை சரிவர மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா். அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி,... மேலும் பார்க்க