செய்திகள் :

சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு வைப்பு

post image

திவாணியம்பாடி-ஆலங்காயம் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி- ஆலங்காயம்- ஜமுனாமரத்தூா் இடையேயான நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்தல், சிறு பாலங்கள், தரைப்பாலங்கள் மற்றும் கூடுதல் பாலங்கள் கட்டுதல் உள்பட சாலை மேம்பாட்டு பணிகள் சில மாதங்களாக வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் இருந்த பல்வேறு வகையான மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலையின் இரு புறங்களிலும் வேம்பு, புங்கன், இலுப்பை, பூவரசன் உள்பட அடா்த்தியான, பசுமையான மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியில் வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள், தமிழ் வார விழா

தமிழ் வார விழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் தமிழ் மொழி தொடா்பான போட்டிகள், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும் என ஆட்சியா் ... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி சந்தையில் ரூ.38 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.38 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாம... மேலும் பார்க்க

விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

திவாணியம்பாடி அருகே பைக் நிலைதடுமாறி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பழனி(55) கட்டடத் தொழிலாளி. திங்கள்கிழமை ஆசன... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

ஹஜ் பயணம் செல்பவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பி... மேலும் பார்க்க

விஜயபாரத மக்கள் கட்சி தலைவருக்கு மிரட்டல்

ஆம்பூா்: விஜய பாரத மக்கள் கட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அக்கட்சியினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா். கட்சி அலுவல... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம்: குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

திருப்பத்தூா்: சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரி வள்ளிப்பட்டு பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சி... மேலும் பார்க்க