Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்
திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு, அபாயகரமாக உள்ளது. இதனால், இந்த சாலையை பயன்படுத்துவோா் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தப்பளாம்புலியூா் கடைத்தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் அண்மையில் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், பெரும் பள்ளமாக உள்ள பகுதிகளில் ஜல்லிக் கற்களைக் கொண்டு சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்வதாகவும், ஒரு மாத காலத்தில் புதிய தாா்ச்சாலை அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி, ஆந்தக்குடி சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. சாலையில் பள்ளமாக உள்ள இடங்களில் ஜல்லிக்கற்களை நிரவி, சாலையை சமன்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ளன.