செய்திகள் :

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்!

post image

குஜராத் மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரத்துக்கு கர்ப்பிணி பெண்ணை சுமந்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

மூங்கில் கட்டையில் புடவையால் தூளி கட்டி, கர்ப்பிணிப் பெண்ணை சுமந்து வந்து அவசர ஊர்தியில் ஏற்றியுள்ளனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம் சோட்டே உதேபூர் மாவட்டத்தில்தான் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் வசித்துவரும் துர்கேடா மலைக்கிராமத்திலுள்ள சாலை வசதியற்ற கைதி பாலியா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று மாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், வேறு வழியின்றி அவரின் குடும்பத்தினர், மூங்கில் கட்டையில் தூளி கட்டி கர்ப்பிணிப் பெண்ணை 5 கி.மீ. தூரத்துக்கு சுமந்து சென்றுள்ளனர்.

சாலை வசதி இல்லாததால், காத்திருந்த அவசர ஊர்தியில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

முதலில் குவான்ட் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பிறகு அங்கிருந்து சோட்டே உதேபூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பெண் குழந்தையை ஈன்று தாய் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 5 குழந்தைகளும் தாயின்றி வளரும் சூழல் உருவாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த அக். 1 ஆம் தேதி பஸ்காரியா பாலியா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், இதேபோன்று தூளி கட்டி தூக்கிச்செல்லும்போதே பிரசவம் நடந்துள்ளது. இதிலும், குழந்தையை ஈன்ற பிறகு தாய் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவங்களின் தொடர்கதையால், இது குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில், துர்கேடா பகுதியை இணைக்கும் வகையில் அதனைச் சுற்றியுள்ள நான்கு பாலியா கிராமங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டது. ஆனால், இதுவரை முழுமையாக சாலைகள் அமைக்கப்படாததால், சோட்டே உதேபூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராம மக்கள் அவதியுறும் நிலையே நீடித்து வருகிறது.

இதையும் படிக்க |உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!

Pregnant woman carried 5 km due to lack of roads in Gujarat dies

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும் ராகுல் காந்தியைப் புகழ்ந்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இடையிலான மாண்பைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

தேர்தலுக்காக அவதூறு பேசி மக்களை திசைதிருப்புகிறார் மோடி: தேஜஸ்வி யாதவ்

ஊடுருவல்களை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, திசைதிருப்பும் முயற்சி என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். ஊடுருவல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!

உத்தரகண்டின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக நேற்றிரவு முழுவதும் கனமழை... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார். குடியரசுத் துணைத் த... மேலும் பார்க்க