செய்திகள் :

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

post image

பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும் ராகுல் காந்தியைப் புகழ்ந்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இடையிலான மாண்பைக் குறைக்கும் சமீபத்திய நடவடிக்கைகளானது, இப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியலை விளையாட்டிலும் தலையிடச் செய்திருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் சுற்று ஆட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றபோது, டாஸ் சுண்டும் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

டாஸ் சுண்டப்பட்டதும் பாகிஸ்தானுக்கு சாதகமாக நாணயம் முகம் காட்ட, டாஸை வென்ற உற்சாகத்துடன் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அகா இந்தியாவை முதலில் பந்துவீச பணித்தார். அதனைத்தொடர்ந்து, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேராக பெவிலியனுக்கு திரும்பினார். எதிரணி கேப்டனுக்கு வாழ்த்து தெரிவிக்கவோ கை குலுக்கவோ இல்லை.

இந்த ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. களத்தில் கடைசி வரை நின்று இந்திய அணி வெற்றி இலக்கை எட்டச் செய்த சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் ஆட்டம் முடிவடைந்ததும், எதிரணி வீரர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க வரும் வரைகூட அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் நேராக பெவிலியனில் உள்ள ஓய்வறைக்கு மிடுக்காக நடைபோட்டனர். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது!

இந்த நிலையில், இந்திய அணியின் செயலை விமர்சித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி அந்நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

“ஆசிய கோப்பை ஆரம்பமான முதலே, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகத்தில் பலமாக பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. மக்கள் மத்தியிலிருந்து வெளிப்பட்ட கடும் அழுத்தத்தால், இந்திய அணி வீரர்களுக்கும் அதேபோல பிசிசிஐ-க்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் தலைமையிடமிருந்து வழங்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன்.

இதில், இந்திய வீரர்களை நான் குற்றம்சுமத்த விரும்பவில்லை; அவர்களுக்கு மேலிடம் அறிவுறுத்தியதை கேட்டு நடக்கின்றனர்”.

“இந்த அரசு (அதாவது, இந்திய அரசு) மதம் என்ற துருப்புச்சீட்டை கையிலெடுத்துக்கொண்டு விளையாடுவதை நான் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன். அவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக ‘முஸ்லிம் - ஹிந்து’ துருப்புச்சீட்டை பயன்படுத்துகின்றனர். இதுவொரு தரக்குறைவான மனப்பாங்காகும்”.

“ராகுல் காந்தியிடம் நேர்மறையான மனப்பாங்கு இருக்கிறது. அவர் ஒவ்வொருத்தருடனும் பேச விருப்பப்படும் மனிதர், ஒட்டுமொத்த உலகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புபவர்” என்றார்.

மேலும் அவர், அடுத்த இஸ்ரேல் ஆக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Former Pakistan cricketer Shahid Afridi has accused the Modi government of "playing the Hindu-Muslim card" while showering unlikely praise on Congress leader Rahul Gandhi.

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்!

குஜராத் மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரத்துக்கு கர்ப்பிணி பெண்ணை சுமந்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. மூங்கில் கட்டையில் புடவையால் தூளி கட்டி, கர்ப்பிணிப் பெண்ணை சுமந்து வந்து அவச... மேலும் பார்க்க

தேர்தலுக்காக அவதூறு பேசி மக்களை திசைதிருப்புகிறார் மோடி: தேஜஸ்வி யாதவ்

ஊடுருவல்களை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, திசைதிருப்பும் முயற்சி என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். ஊடுருவல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!

உத்தரகண்டின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக நேற்றிரவு முழுவதும் கனமழை... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார். குடியரசுத் துணைத் த... மேலும் பார்க்க