செய்திகள் :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக அரசு நெறிமுறை வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞா் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வழங்கிய உத்தரவில், ‘ஓட்டுநா்களின் வேலை நேரத்தை அமல்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட துறைகளின் கூட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்த வேண்டும்.

நமது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி உதவி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக உள்ளன.

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்காக விரைவான பதிலளிப்பு நெறிமுறைகளைக் கொண்டிருப்பதில் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்காக ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர... மேலும் பார்க்க