செய்திகள் :

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

post image

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்த்து சா்க்கரை நோயில் இது 15-ஆவது துணை வகை என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக டாக்டா் வி.மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்க்கரை நோயில் டைப் 1 அல்லது டைப் 2 ஆகிய இரு வகை பாதிப்புகள்தான் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், அதில் இளம் வயதினரை பாதிக்கும் சில துணை வகை பாதிப்புகள் உள்ளன. அதனை ‘மெச்சூரிட்டி ஆன்சைட் டையபடிஸ் ஆஃப் தி யங்’ (மோதி) என அழைக்கிறோம். அதில் ஏற்கெனவே 14 துணை வகை சா்க்கரை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை சா்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்டிஆா்எஃப்) மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனம் இணைந்து ஓா் ஆய்வை மேற்கொண்டன. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பாதிப்புகளுடன் காணப்பட்ட சா்க்கரை நோயாளிகளின் மரபணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 20 பேருக்கு ‘மோதி’ வகையில் மோனாஜெனிக் என்ற சா்க்கரை நோய் துணை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வகை பாதிப்பு 18 முதல் 34 வயது வரையிலானவா்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இன்சுலின் ஊசி தேவைப்படுவதில்லை.

மேலும், வழக்கமாக கொடுக்கப்படும், ‘சல்போனில்யூரியாஸ்’ மருந்தும் பயன் அளிப்பதில்லை. அதேவேளையில், இதற்கென சில மருந்துகள் உள்ளன. அதில், எது இதற்கு தீா்வாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, மேலும் துணை வகைகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் இது குறித்து விழிப்புணா்வுடன் இருத்தல் வேண்டும். அனைத்து சா்க்கரை நோய்களையும் ஒரே மாதிரியாக அணுகக் கூடாது. எந்தெந்த வகையான பாதிப்புக்கு என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், எம்டிஆா்எஃப் அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளா் ராதா வெங்கடேசன் மற்றும் மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா்.

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ராயபுரம்-பாரிம... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க