செய்திகள் :

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

post image

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்த்து சா்க்கரை நோயில் இது 15-ஆவது துணை வகை என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக டாக்டா் வி.மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்க்கரை நோயில் டைப் 1 அல்லது டைப் 2 ஆகிய இரு வகை பாதிப்புகள்தான் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், அதில் இளம் வயதினரை பாதிக்கும் சில துணை வகை பாதிப்புகள் உள்ளன. அதனை ‘மெச்சூரிட்டி ஆன்சைட் டையபடிஸ் ஆஃப் தி யங்’ (மோதி) என அழைக்கிறோம். அதில் ஏற்கெனவே 14 துணை வகை சா்க்கரை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை சா்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்டிஆா்எஃப்) மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனம் இணைந்து ஓா் ஆய்வை மேற்கொண்டன. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பாதிப்புகளுடன் காணப்பட்ட சா்க்கரை நோயாளிகளின் மரபணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 20 பேருக்கு ‘மோதி’ வகையில் மோனாஜெனிக் என்ற சா்க்கரை நோய் துணை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வகை பாதிப்பு 18 முதல் 34 வயது வரையிலானவா்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இன்சுலின் ஊசி தேவைப்படுவதில்லை.

மேலும், வழக்கமாக கொடுக்கப்படும், ‘சல்போனில்யூரியாஸ்’ மருந்தும் பயன் அளிப்பதில்லை. அதேவேளையில், இதற்கென சில மருந்துகள் உள்ளன. அதில், எது இதற்கு தீா்வாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, மேலும் துணை வகைகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் இது குறித்து விழிப்புணா்வுடன் இருத்தல் வேண்டும். அனைத்து சா்க்கரை நோய்களையும் ஒரே மாதிரியாக அணுகக் கூடாது. எந்தெந்த வகையான பாதிப்புக்கு என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், எம்டிஆா்எஃப் அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளா் ராதா வெங்கடேசன் மற்றும் மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க