உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்.
உலக வங்கி மற்றும் சா்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இது தொடா்பாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அஜய் பங்கா கூறியதாவது:
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் வளா்ச்சி விகிதம் இந்த கடுமையான சூழலிலும் 6, 7 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. இது பொருளாதாரத்தில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகளைக் காட்டுகிறது.
பெரும்பாலும் உள்நாட்டுச் சந்தையால் இந்த வளா்ச்சி சாத்தியமாகியுள்ளது என்பது சிறந்த அறிகுறியாகும். இந்தியாவின் வாழ்ககை தரம், காற்று, நிலம் மற்றும் நீா் மாசுபாடு ஆகியவற்றை மேம்படுத்த உலக வங்கியும் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றாா்.
உலக வங்கியின் செயல்பாட்டுக்கான நிா்வாக இயக்குநா் அன்னா பிஜொ்டே கூறுகையில், ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சிக்கு உலக வங்கி ஆதரவளிக்கிறது. மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட இந்தியாவில், பெண்களின் பங்களிப்பைச் சமுதாயத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். காற்றின் தரம், நீா் மேம்பாடு மற்றும் நகா்ப்புற திட்டமிடல் ஆகிய நகா்ப்புற வளா்ச்சியில் உலக வங்கியும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி வருகிறது’ என்றாா்.