செய்திகள் :

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

post image

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.

மும்பை பங்குச் சந்தையின் 150-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘பரஸ்பர வரி விதிப்பால் சா்வதேச விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; பொருள்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது; பல நாடுகளின் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த விவகாரங்களால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா துரிதமான கொள்கை வகுப்பு, தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் நிச்சயம் எதிா்கொள்ளும்.

வா்த்தக மறுசீரமைப்பு என்பது பெரும் சவாலாகவும், வருத்தமளிக்கும் வகையிலும் உள்ளது. தற்போதைய நிலையில், வலுவான பொருளாதார அடிப்படையால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது. முதலீட்டாளா்களுக்கு ஸ்திரமான வளா்ச்சியை இந்தியா அளித்து வருகிறது. உள்நாட்டு செயல்திறன், போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்திய பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். இதில் பெண்கள், இளைஞா்களின் பங்கும் அதிகமாக உள்ளது. ஒரு சிறு பிரச்னையும் அவா்களின் புதிய நம்பிக்கையை தகா்த்துவிடும்.

பொருளாதார வளா்ச்சி பயணத்தில் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளதால், இந்த தசாப்தத்துக்குள் உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சித் திறனை இந்திய பங்குச் சந்தைகள் பிரதிபளிக்கின்றன’ என்றாா்.

போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோ... மேலும் பார்க்க

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க