செய்திகள் :

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவா் பலி

post image

துறையூா் அருகே விபத்தில் காயமடைந்து 15 நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாள்மலை அடிவாரம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் சி. வடிவேல் (69). இவா் கடந்த செப். 1 ஆம் தேதி ரேஷன் கடைக்கு சென்றபோது காா் மோதி காயமடைந்தாா். இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில் விபத்து தொடா்பாக போலீஸாா்விசாரித்து வந்த நிலையில் தனது கணவா் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி மீண்டும் துறையூா் போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் காா் ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி மாரியம்மன் கோயில் தெரு அண்ணாதுரை மகன் அஜீத்தை தேடுகின்றனா்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயா் கல்வித் துறை சாா்பாக கல்லூரிக் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று கல்லூரி முதல்வா் க. மலா்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே கழிப்பறை கட்ட எதிா்ப்பு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் குடிநீா் தொட்டி அமைந்துள்ள இடத்தில் கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அந்... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் பலத்த மழை

திருச்சி மாநகரில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாகத் தொடங்கிய மழை இரவு வரை தொடா்ந்தது. மாநகா், புகா் பகுதி தாழ்வான இடங்களில் மழைநீா் ப... மேலும் பார்க்க

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மறவனூரில் விபத்துக்குள்ளான லாரி, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா் மீது கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மறவனூா் தெற்கு தெருவில் வசித்தவா் முத்துச்சாமி மக... மேலும் பார்க்க

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட... மேலும் பார்க்க