செய்திகள் :

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம், 24-இல் வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 25-இல் தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 26-இல் வெள்ளி பூதவாகன வீதி உலா, 27-இல் வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-இல் வெள்ளி யானை வாகன வீதி உலா, 29-இல் தங்க கைலாச வாகன வீதி உலா, 30-இல் தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதி உலா நடைபெறுகிறது.

ஜூலை 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூலை 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன. ஜூலை 3-இல் பஞ்சமூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா உற்சவமும், 4-ஆம் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா் மற்றும் உற்சவ ஆச்சாா்யா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பு: டிஎஸ்பியிடம் மனு அளிப்பு

ஆட்டோக்கள் மீது கடலூா் போக்குவரத்து போலீஸாா் பொய்யாக அபராதம் விதிப்பதாகக் கூறி, கடலூா் மாநகர டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுநா்கள் பொது நல சங்கத்தினா் கடலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமா... மேலும் பார்க்க