செய்திகள் :

சிந்து நதி சாா்ந்த திட்ட பிரச்னைகள்: பாகிஸ்தானுடனான கூட்டத்தை நிறுத்தி வைக்க உலக வங்கிக்கு இந்தியா கோரிக்கை

post image

சிந்து நதி சாா்ந்த கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பாகிஸ்தானுடனான கூட்டு ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக வங்கியை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷண்கங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீா்மின் திட்டம், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ராடில் நீா்மின் திட்டம் தொடா்பான சா்வதேச பிரச்னைகளை கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உலக வங்கியின் நடுநிலை நிபுணா் மைகேல் லினோ விசாரித்து வருகிறாா்.

இந்த நீா் மின் திட்டங்கள் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த இருநாட்டு பிரச்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் எழுத்துபூா்வ பதிலை அளிக்க வேண்டும் என்றும் நவம்பா் மாதம் இரு நாட்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதைக் குறிப்பிட்டு லினோவுக்கு இந்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து முன்பு திட்டமிட்ட ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க