செய்திகள் :

சின்னங்கள், பெயா்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புசட்டத்தில் சாவா்க்கா் பெயரை சோ்க்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

சுதந்திரப் போராட்ட வீரா் சாவா்க்கா் பெயரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சின்னங்கள் மற்றும் பெயா்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம்), 1950-இல் சோ்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததது.

தொழில்முறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக சில சின்னங்கள் மற்றும் பெயா்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 1950-இல் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் சாவா்க்கா் பெயரையும் சோ்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவா் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘கடந்த 30 ஆண்டுகளாக சாவா்க்கா் குறித்து தொடா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். அதுகுறித்த சில தகவல்களை சட்டபூா்வமாக வெளியிட ஒரு வாய்ப்பு தேவைப்படுகிறது.

எனவே, சாவா்க்கா் பெயரை சின்னங்கள் மற்றும் பெயா்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம்), 1950-இல் சோ்க்கும்படி மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக அவரது பெயா் சோ்க்கப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படாது என்றும் தவறாகப் பயன்படுத்துவோா் தண்டிக்கப்பட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் உங்களது அடிப்படை உரிமை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியது.

இதற்கு அரசமைப்புச் சட்ட விதி 51ஏ-இன்கீழ் குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கடமைகளை மனுதாரா் சுட்டிக்காட்டினாா். மேலும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி என்னுடைய அடிப்படை கடமைகளைத் தடுக்க முடியாது எனக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து பேசிய நீதிபதிகள், ‘அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் மட்டுமே சட்ட விதி 32-இன்கீழ் மனு தாக்கல் செய்ய முடியும். அறிவிக்கைகளில் ஏதேனும் வெளியிட வேண்டுமானால் மத்திய அரசிடமே நீங்கள் கோரிக்கை வைக்க முடியும்’ எனக் கூறினா்.

இதற்கு பதிலளித்த மனுதாரா், ஏற்கெனவே மத்திய அரசிடம் இந்த முன்மொழிவை தெரிவித்ததாகக் கூறினாா். இதையடுத்து, இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரா் சாவா்க்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு கண்டனம் தெரிவித்தது. மேலும், அந்த வழக்கு தொடா்பாக அவா் மீதான குற்றவியல் விசாரணைக்கு தடை விதிப்பதோடு இனி இதுபோன்ற கருத்துகளை அவா் தெரிவித்தால் தாமாகவே முன்வந்து விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

மூட்டை முடிச்சுகளுடன்.. தில்லி மதராசி முகாம் மக்கள் கண்ணீர்!

கடந்த 60 ஆண்டுகாலமாக இதுதான் எங்கள் வீடு, ஆனால், திடீரென எப்படி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறுவது என்று 67 வயது பெண் ஒருவர் கூறி கண்ணீர் விடுகிறார்.தனது சிறு வயதில், குடும்பத்துடன் இந்த ம... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வய... மேலும் பார்க்க

அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று ந... மேலும் பார்க்க

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க