செய்திகள் :

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

post image

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றங்கள் போன்ற வழக்கமான குற்றங்களையும் மற்றும் பிற கடுமையான குற்றங்ளையும் பிரதானமாக விசாரிக்கும் அமைப்பான சிபிஐயில் ஏராளமான பொறுப்புகளும் செலவுகளும் உள்ளன.

2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னா், ரூ.951.46 கோடியைப் பெற்றது, பின்னர் இது திருத்தப்பட்ட தொகையாக ரூ.986.93 கோடியாக திருத்தப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.84.12 கோடி அதிகமாகும்.

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

சிபிஐ பயிற்சி மையங்கள் நவீனப்படுத்துதல், விசாரணைக்கு உதவும் தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் மையங்கள் நிறுவுதல், விரிவான நவீனமயமாக்கல் மற்றும் நிலங்களை வாங்குதல், நிறுவனத்திற்கான அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களைக் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் முதன்மையான புலனாய்வு நிறுவனமான சிபிஐ, வங்கி கடன் மோசடிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் கடத்தல் வழக்குகள், மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற வழக்கமான குற்றங்களைத் தவிர, செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ கரன்சி மற்றும் டார்க் வெப் எனப்படும் நிழலுலக இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தீவிர குற்றங்களை கையாள்வதில் ஈடுபட்டுள்ளது.

இது பல்வேறு மாநிலங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்படும் குற்றவியல் வழக்குகளையும் கையாள்கிறது.

2021-ம் ஆண்டு மாணவியைக் கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கான்பூரில் கடந்த 2021 மே மாதம் பாலிடெக்னிக் மாணவியான ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பலோசிஸ்தானின் கலா... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.மதராஸ், காலா, கபாலி... மேலும் பார்க்க

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க