செய்திகள் :

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி

post image

சென்னை: சிம்பொனி நிகழ்ச்சி நம் நாட்டின் பெருமை, என்னுடை பெருமை அல்ல என சிம்பொனி நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியல் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல. நாட்டின் பெருமை... இந்தியாவின் பெருமை. இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையராஜா என்றார்.

மேலும், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் நான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றார்.

இசை நிகழ்ச்சியின் மகிழ்ச்சி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு சிம்பொனி இசை நிகழ்ச்சி உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும் என பதிலளித்த இளையராஜா, இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை என்றார்.

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு: மத்திய தொழிலாளா் அமைச்சகம்

இதைத்தொடர்ந்து இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து முதல் இந்தியராக இளையராஜா, தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

அப்போது தனது பிரபலமான சில பாடல்களின் பிரத்யேக இசைக்குழு பதிப்புகளை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்... மேலும் பார்க்க

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்ப... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்

ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவணந்தப்புரத்தின் தும்... மேலும் பார்க்க

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க