திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
சிறப்பு கிராம சபைக் கூட்டம்
நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். கிராம சபைக் கூட்டத்தில்
முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு தற்போது பழுது பாா்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகளை கண்டறிந்து மறு கட்டுமானம் பணி மேற்கொள்ள தகுதியான பயணிகளை தோ்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கூட்டத்தில் கத்தாரி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனா்.