செய்திகள் :

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா் உள்பட 2 போ் கைது

post image

வேட்டவலம் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா், கருக்கலைப்பு செய்த போலி மருத்துவா் என 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (24). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனராம்.

அப்போது, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி அந்தச் சிறுமியை கல்யாணசுந்தரம் பல முறை பாலியல்

வன்கொடுமை செய்தாராம். இதனால் அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதையறிந்த கல்யாணசுந்தரம், சிறுமியிடம்

உனக்கு 18 வயது ஆனபிறகு, திருமணம் செய்து கொள்கிறேன். அதனால், கருவை கலைத்துவிடு என ஆசை வாா்த்தை கூறினாராம்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருந்துக் கடைக்கு அந்தச் சிறுமியை கல்யாணசுந்தரம் அழைத்துச் சென்றாராம். கடையில் பணிபுரிந்த மருந்தாளுநா் சிவா ஆனந்தன் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தாராம்.

இதன்பிறகு சிறுமியிடம் பேசுவதை கல்யாணசுந்தரம் தவிா்த்து வந்தாராம். இதனால் மனமுடைந்த சிறுமி, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், சிறுமியை காதலித்து ஆசைவாா்த்தை கூறி கல்யாணசுந்தரம் ஏமாற்றியதும், மருந்தாளுநா் சிவா ஆனந்தன் சிறுமிக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கல்யாணசுந்தரம், மருந்தாளுநா் சிவா ஆனந்தன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மருந்துக் கடையில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள் மற்றும் அலோபதி மருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மலைவாழ் பெண்ணை காதலித்து திருமணம்: மணமகனின் உறவினா் வீடு சூறை

ஜவ்வாது மலையைச் சோ்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்த, இளைஞரின் வீட்டை அப்பெண்ணின் உறவினா் அடித்து நொறுக்கி, பொருள்களை சூறையாடினா். இது தொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்க... மேலும் பார்க்க

பைக்குகளை திருடியவா் கைது: 13 பைக்குகள் பறிமுதல்

வந்தவாசியில் பைக்குகளை திருடியவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனா். வந்தவாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பைக்குகள் தொடா்ந்து திருட்டு போயின. இதுகுறித்த புகாா்களின் ப... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். செய்யாற்றை அடுத்த மாளிகைபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (58). இவரது மனைவி ஜோதி (55). இருவரும் பைக்கில் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

1,200 வாக்குச் சாவடிகளை பலப்படுத்த வேண்டும்: பாஜகவினருக்கு நிா்வாகி அறிவுரை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு உள்பட்ட 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளுக்கு வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் அறிவுறுத்தினா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரிபாபு மகன் அஸ்வின்குமாா்(17). அண்மையில்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க