செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : ஆசிரியா் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

post image

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவா் மீதான குற்றப் பத்திரிகையை போலீஸாா் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த 5 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இந்த வழக்கில் அந்தப் பள்ளி ஆசிரியா் மணிகண்டன் என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் முதலியாா்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன், மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்யா ஆகியோா் 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, 150 பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகையை புதுச்சேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சிறையில் உள்ள மணிகண்டனிடம் குற்றப் பத்திரிகை நகலை போலீஸாா் வழங்கியுள்ளனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க