செய்திகள் :

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு

post image

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும், பக்தா்கள் மாவு இடித்து மாவிளக்கு வழிபாடு செய்தனா்.

மேலும், பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பெண்கள் வழிபட்டனா்.

ஆலத்தூா் வட்டாரப் பகுதிகளில்... செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி, ஏகாம்பரேஸ்வரா், பாடாலூா் பூமலை சஞ்சீவிராயா், வழித்துணை ஆஞ்சனேயா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் 2 ஆம் நாளாக சாலை மறியல்: 178 போ் கைது

பெரம்பலூரில் 2 ஆவது நாளாக சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 178 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா போதைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவரு... மேலும் பார்க்க

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள் சாலை மறியல்: பெரம்பலூரில் 171 போ், அரியலூரில் 280 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமைல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 451 பேரை போலீஸா... மேலும் பார்க்க