செய்திகள் :

சிவகங்கையில் மே 16-இல் வேலை வாய்ப்பு முகாம்

post image

வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக

வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வருகிற 16.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

எனவே, விருப்பமுள்ளவா்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

சிவகங்கையில் நெகிழிக் கழிவுகளால் மாசடையும் தெப்பக்குளம்!

சிவகங்கையில் உள்ள 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக்குளம் நெகிழிக் கழிவுகளால் மாசடைந்து வருவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டினா்.சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6 ஏக்கா் பரப்ப... மேலும் பார்க்க

உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்: ஆட்சியா்

உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம் என மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அறிவுறுத்தினாா். சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 முடித்த மா... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள நெடுவதாவு கிர... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.திருப்பத்தூா் காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்தவா் செந்தில்நாதன். இவரது மகள் சினேகா (23). இவா் கண்டவராயன்பட்... மேலும் பார்க்க

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க