செய்திகள் :

சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

post image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை

திருப்பத்தூர் அருகேயுள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த சகோதர்களான மணிகண்டன், (வயது 30) சிவசங்கரன் (எ)விக்னேஷ் (வயது 27) இருவரும் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மதகுபட்டி வட்டாரத்தில் சமீபகாலமாக ஆடுகள், கோழிகள் காணாமல் போய் வந்ததால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் புதிதாக யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்று கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், அழகமாநகரியில் உள்ள ஒரு தோப்புக்குள் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது மணிகண்டன் மற்றும் விக்னேஷ் தோப்பிற்குள் இருப்பதை பார்த்ததும் அவர்களை கட்டையாலும் கைகளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கி விழுந்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

அதன் பின்பு ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், அவர்கள் ஆடு, கோழி திருட வந்தபோது தாக்குதல் நடந்ததாக ஊர்காரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே திருட வந்தார்களா அல்லது முன்பகை காரணமா என்ற கோணத்தில் மதகுபட்டி காவல்துறையினர் ஊர்காரர்கள் சிலரைப்பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சகோதர இளைஞர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம், மதகுபட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க