செய்திகள் :

சிவகாசி: ஜாமீனில் வந்தவர் வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை; பழிக்குப்பழி சம்பவத்தில் 3 பேர் கைது

post image

சிவகாசி அருகே பழிக்குப்பழியாக வீடு புகுந்து கூலித் தொழிலாளியை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27), கூலி தொழிலாளி. கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சுரேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, சிவகாசி - விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார். நள்ளிரவில் இவரின் வீட்டில் வீட்டுக்குள் புகுந்த மர்மகும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

சுரேஷ்

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், போலீஸூக்கு தகவல் சொல்லவும் தகவலறிந்து விரைந்த வந்த போலீஸார் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பான புகாரின்பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர்.

இந்தநிலையில் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மதன் கோபால்(23), தனசேகரன்(23), சூர்யா பிரகாஷ்(19) மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்துதான் சுரேஷை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

Murder (Representational Image)

இதில், முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மதனகோபால் என்பவரை கொலை செய்வதற்காக அவரின் வீட்டுக்குள் சுரேஷ் புகுந்துள்ளார். அப்போது, உஷாராகி, மதனகோபால் தப்பி ஓடிவிட்டதால், அவரின் அண்ணன் குணசேகரனை, சுரேஷ் வெட்டிக்கொலை செய்தார். அந்த கொலைவழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற சுரேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில், பழிப்பழியாக சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய மதனகோபால், தனது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.

நெல்லை: `என்னை எப்படியும் கொன்னுடுவாங்க'- கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ-யின் கண்ணீர் வீடியோ

நெல்லை டவுன், தைக்கா தெருவில் வசித்து வந்தவர் ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி (60). விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர், டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக பைக்கில்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் கடந்த உறவில் பிறந்த ஒரு மாத குழந்தை சந்தேக மரணம் - உடலை தோண்டி பிரேத பரிசோதனை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு இடையே உள்ள திருமணம் தாண்... மேலும் பார்க்க

"பாதி விலைக்கு ஸ்கூட்டர்; 48,384 பேரிடம் ரூ.231 கோடி மோசடி" - சட்டசபையில் கேரள முதல்வர்

கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (27). இவர் ‘ஸீட் சொசைட்டி’ என்ற பெயரில் பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள், விவசாய உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி பொது... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழாவுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்... படகுடன் சிறைபிடிப்பு..!

கடந்த 14,15 ஆகிய இரு நாள்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. இதில் 3140 இந்திய பக்தர்கள் பங்கேற்றனர். கச்சத்தீவு திருவிழாவினை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடி... மேலும் பார்க்க

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க