செய்திகள் :

"சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்.." -155 சதவிகித வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் விளக்கம்

post image

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தபோது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை.

இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவின் மீதான இந்த 155 சதவிகித வரி விதிப்பு எச்சரிக்கைக் குறித்து ட்ரம்ப், "சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாவே சீனாதான் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. இதற்கு முன் இருந்த அமெரிக்க அதிபர்கள் வெளிநாட்டு வணிகத்தில் மெத்தனமாக இருந்துவிட்டனர். அதை சீனா மட்டுமல்ல பல்வேறு நாடுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். என்னால் அப்படிவிட முடியாது.

ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியா உடனான வர்தகங்கள் எல்லாம் நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கின்றன. சீனாவுடனான இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது." என்று பேசியிருக்கிறார்

`இது சட்டத்திற்கு புறம்பானது' - WTO-ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?

'இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்' என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.என்ன பிரச்னை?இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்க... மேலும் பார்க்க

``எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திரு... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?" - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எ... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு: `செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை' - சென்னை மாநகராட்சி அறிவுரை

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே... மேலும் பார்க்க

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்... மேலும் பார்க்க